தேடலுக்கான சொல்2
தேடப்பட்டள்ளவைகளுக்கான பட்டியல்6
தேடப்பட்டள்ளவைகளுக்கான பட்டியல்6
சுத்தமான நிலையில் துஆ கேட்க வேண்டும். அதற்காக தொழுகைக்கு வுழு செய்வதைப் போல் செய்து கொள்ள வேண்டும். ஒரு முறை அபூ ஆமிர் (ரழி) அவர்கள் அபூமூஸா (ரழி) அவர்களிடம் தனக்காக பிரார்த்திக்குமாறு நபியவர்களிடம் கூறுமாறு கூறினார். அபூ மூஸா (ரழி) அவர்களும் இதை நபியவர்களிடம் கூற, நபியவர்களோ தண்ணீர் கொண்டுவரும்படி கூறி, அதில் அங்கத் தூய்மை (வுழூ) செய்தார்கள். பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி, “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும்விட (தகுதியில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் தென்பட்டது. உடனே அபூமூஸா அவர்களும், “எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள் (நபியே!)” என்று...
மேலும்துஆ கேட்கும் போது அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்தும், அவன் துஆவை அங்கீகரிப்பான் எனும் எண்ணத்திலும் கேட்க வேண்டும். துஆ விரைவாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாய் இருக்கக் கூடாது. அதை அல்லாஹ் எப்படியும் அங்கீகரிப்பான் என்ற நம்பிக்கையில் இருக்க வேண்டும். அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவைத் துண்டிப்பதையோ வேண்டிப் பிரார்த்திக்காத வரையிலும் அவசரப்படாதவரையிலும் அவரது பிரார்த்தனை ஏற்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது". அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! "அவசரப்படுதல்" என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது.அதற்கு, "ஒருவர் நான் பிரார்த்தித்தேன். (மீண்டும்) பிரார்த்தித்தேன். ஆனால், அவன் என் பிரார்த்தனையை ஏற்பதாகத் தெரியவில்லை" என்று கூறி, சலிப்படைந்து பிரார்த்திப்பதைக் கைவிட்டுவிடுவதாகும்" என்று பதிலளித்தார்கள்.” (முஸ்லிம் 2735)
மேலும்துஆவின் போது அல்லாஹ்விடம் கேட்கும் தேவைகளை திரும்பத் திரும்ப கேட்க வேண்டும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பத்ருப் போரில் நபியவர்களின் துஆவைப் பற்றிக் குறிப்பிடுகையில், "இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக...!” என நபியவர்கள் கூறிய பின் அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது.அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரழி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள்மீது போட்டுவிட்டு,பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்" என்று கூறினார்கள். (முஸ்லிம் 1763).அவ்வாறே அபூஹுரைரா (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள், நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில்...
மேலும்தான் கேட்கும் துஆவில் அல்லாஹ்வை அதிகமாக புகழ வேண்டும். ஓர் அடியான் தன்னைப் புகழ்வதை அல்லாஹ் விரும்புகிறான். இது ஓர் வணக்கமாக இருக்காவிட்டால் அல்லாஹ் தன் அடியாரை விட்டும் தேவையற்றவனாகவே இருக்கிறான். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்” (புஹாரி 4637, முஸ்லிம் 2760).
மேலும்எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக. (அல்குர்ஆன் 02:250).
மேலும்ஆயதுல் குர்ஸியை ஒரு தடவை ஓத வேண்டும்.அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (அல்குர்ஆன் 02:255)
மேலும்