9
தான் கேட்கும் துஆவில் அல்லாஹ்வை அதிகமாக புகழ வேண்டும். ஓர் அடியான் தன்னைப் புகழ்வதை அல்லாஹ் விரும்புகிறான். இது ஓர் வணக்கமாக இருக்காவிட்டால் அல்லாஹ் தன் அடியாரை விட்டும் தேவையற்றவனாகவே இருக்கிறான். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்” (புஹாரி 4637, முஸ்லிம் 2760).