8

துஆவை சப்தமில்லாமல் அமைதியாக கேட்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், “(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்” (அல்குர்ஆன் 07:55). துஆவை அமைதியாகக் கேட்பதானது மனத்தூய்மையை பறைசாற்றுகிறது. இதனாலே அல்லாஹ் ஸகரிய்யா அலை அவர்கள் துஆ கேட்ட விதத்தைப் பற்றி அல்குர்ஆனில் புகழ்ந்து கூறியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான், “(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய (ரஹ்)மத்தைப் பற்றியதாகும். அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரழில் பிரார்த்தித்த போது (இவ்வாறு (ரஹ்)மத்தை அருளினான்).” (அல்குர்ஆன் 17:03). அவர் மனத்தூய்மையுடன் பிரார்த்தித்ததனாலே இவ்வாறு கிடைத்தது என அல்குர்ஆன் விளக்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

8/10