6
அல்லாஹ்வின் அழகிய பெயர்களைக் கொண்டு அவனிடம் துஆ கேட்க வேண்டும். அல்லாஹ்விடம் விஸ்தீரனத்தைக் கேட்டால், “வீஸ்தீரனத்தை அளிப்பவனே” எனவும், அருளைக் கேட்டால், “அருளாலனே, அன்புடையோனே” எனவும், கௌரவத்தைக் கேட்டால், “கண்ணியமானவனே” எனவும், பாவமன்னிப்பைக் கேட்டால், “மன்னிப்பளிப்பவனே” எனவும், நோய் நிவாரணம் கேட்டால், “நோய்களைக் குணப்படுத்துபவனே” எனவும் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த பெயர்களைப் பயன்படுத்தி அவனிடம் துஆ கேட்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், “அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்” (அல்குர்ஆன் 07:180)