5

துஆ கேட்கும் போது அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்தும், அவன் துஆவை அங்கீகரிப்பான் எனும் எண்ணத்திலும் கேட்க வேண்டும். துஆ விரைவாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாய் இருக்கக் கூடாது. அதை அல்லாஹ் எப்படியும் அங்கீகரிப்பான் என்ற நம்பிக்கையில் இருக்க வேண்டும்.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவைத் துண்டிப்பதையோ வேண்டிப் பிரார்த்திக்காத வரையிலும் அவசரப்படாதவரையிலும் அவரது பிரார்த்தனை ஏற்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது". அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! "அவசரப்படுதல்" என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது.

அதற்கு, "ஒருவர் நான் பிரார்த்தித்தேன். (மீண்டும்) பிரார்த்தித்தேன். ஆனால், அவன் என் பிரார்த்தனையை ஏற்பதாகத் தெரியவில்லை" என்று கூறி, சலிப்படைந்து பிரார்த்திப்பதைக் கைவிட்டுவிடுவதாகும்" என்று பதிலளித்தார்கள்.” (முஸ்லிம் 2735)

5/10