துஆவின் போது அல்லாஹ்வைப் புகழ்ந்து, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூற வேண்டும்.
ஃபளாலா பின் உபைத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். உங்களில் ஒருவர் தொழுதால் முதலில் தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு நபியின் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்.
இதன் போது சில சூராக்களின் ஆரம்பத்தில் இடம்பெற்றுள்ளவாறு அல்லாஹ்வைப் புகழ்ந்தாலும் போதுமானது. அவ்வாறே நபி (ஸல்) அவர்களையும் புகழ்ந்து, அவர் மீது ஸலவாத்தும் கூற வேண்டும். இதுவே துஆ அங்கீகரிக்கப்படுவதற்கான ஏற்றமான முறையாகும். இது பற்றிய விபரம் பின்னே இடம்பெறும்.