10
துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள் பற்றிய அறிவு இருப்பதோடு, அந்நேரத்திலே அல்லாஹ்விடம் துஆவும் கேட்க வேண்டும்.
அல்குர்ஆன், ஸுன்னா குறிப்பிடுகின்ற, துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்களில் சில வருமாறு:
(அதானுக்கும் இகாமத்துக்கும் இடையில் கேட்கும் துஆ, இரவின் மூன்றில் இறுதிப்பகுதியில் கேட்கும் துஆ, ஜும்ஆ நாளில் ஒரு நேரத்தில் கேட்கும் துஆ, ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் கேட்கும் துஆ, ஸுஜூதில் கேட்கும் துஆ, மழை பொழியும் போது கேட்கும் துஆ, கண்ணெதிரே இல்லாத ஓர் முஸ்லிம் சகோதரருக்காக கேட்கும் துஆ, பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக கேட்கும் துஆ, பிரயாணியின் துஆ, அநீதமிழைக்கப்பட்டவரின் துஆ போன்றனவாகும்)