1

சுத்தமான நிலையில் துஆ கேட்க வேண்டும். அதற்காக தொழுகைக்கு வுழு செய்வதைப் போல் செய்து கொள்ள வேண்டும். ஒரு முறை அபூ ஆமிர் (ரழி) அவர்கள் அபூமூஸா (ரழி) அவர்களிடம் தனக்காக பிரார்த்திக்குமாறு நபியவர்களிடம் கூறுமாறு கூறினார். அபூ மூஸா (ரழி) அவர்களும் இதை நபியவர்களிடம் கூற, நபியவர்களோ தண்ணீர் கொண்டுவரும்படி கூறி, அதில் அங்கத் தூய்மை (வுழூ) செய்தார்கள். பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி, “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும்விட (தகுதியில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் தென்பட்டது. உடனே அபூமூஸா அவர்களும், “எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள் (நபியே!)” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “இறைவா! அப்துல்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். (புஹாரி 4323, முஸ்லிம் 2498)

1/10